உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட் 19 – தொடர்ந்தும் 132 நோயாளிகள் சிகிச்சையில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொவிட் 19 (கொரோனா) வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 08 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று(31) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,868 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இதுவரை 3,012 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 132 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக மனு மீதான பரிசீலனை இன்று

எனது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை- மஹிந்த

இலங்கையில் 187வது கொரோனா மரணம் பதிவு