உள்நாடுசூடான செய்திகள் 1

இடைக்கால கணக்கறிக்கை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று

(UTV|கொழும்பு) – இந்த வருடத்தின் இறுதி காலாண்டுக்கான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றையதினம்(28) இரண்டாவது நாளாகவும் விவாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நேற்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கமைய, செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதிவரையான 4 மாத செலவீனங்களுக்காக ஆயிரத்து 900 பில்லியன் பெறுமதியான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது 1300 பில்லியன் ரூபாவுக்கு அதிகரிக்காத செலவீனங்களுக்காக அனுமதி கோரி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த இடைக்கால கணக்கறிக்கை தொடர்பில் விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

Related posts

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்காக மேலும் மூன்று மனுக்கள் தாக்கல்

editor

சிகை அலங்கார கடையில் சடலம் மீட்பு – சம்மாந்துறை பகுதியில் சம்பவம்

editor

கோட்டாபயவும் ரணிலும் எதேச்சதிகாரமாக முன்னெடுத்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வோம் – சஜித்

editor