உள்நாடு

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 15 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இவர்களுள் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் உட்பட 11 பேர் உள்ளடங்குவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

அனுமதி மறுக்கப்பட்ட பொருட்களை சிறைச்சாலைக்குள் கொண்டு சென்றமை தொடர்பில் இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் இவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

Related posts

முத்துராஜவெல ஈரவலயத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க அமைச்சரவை அனுமதி 

பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம் நிச்சயமாக பாய்வோம்.

பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை