உள்நாடு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,880 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம்(11) கொரோனா தொற்றுக்குள்ளான 09 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐவர், சவுதி அரேபியாவில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வந்த ஒருவர் மற்றும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய மூவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 2622 பேர் குணமடைந்துள்ளதுடன், 247 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 11 விமானங்கள்

பசில் – கட்சியின் பின்வரிசை எம்.பிக்களுக்கு இடையே இன்று சந்திப்பு

பாக்கு நீரினையை  நீந்திக் கடக்க உள்ள  திருகோணமலை  சாஹிரா கல்லூரி மாணவன் !