உள்நாடு

வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு

(UTV | கொழும்பு) – வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீ தேவி புகையிரதத்தில் காட்டு யானை ஒன்று மோதுண்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து மாங்குளம் மற்றும் புளியங்குளம் இடையே ஏற்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் ரயில் தடம்புரண்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை வரவேற்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

ஹக்கீமை பற்றி நன்றாக அறிந்திருந்தும் முஷாரப் அரசியல் தற்கொலை செய்ய முனைவது வரலாற்று தவறாக அமையும் – யஹியாகான்

editor