உள்நாடு

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை(02) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அமைதி காலம் ஆரம்பமாவதுடன், குறித்த அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

சந்தேகத்திற்கிடமான முறையில் 23 வயதுடைய யுவதி உயிரிழப்பு!

editor

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்தை உடனடியாக செயலிழக்கச் செய்து நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

editor

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்தவர்களை புத்தளம் மாவட்ட வாக்காளர் பட்டியலில் பதிவு