உலகம்

வட கொரியாவில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்

(UTV|வட கொரியா) – வட கொரியாவில் முதல் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற ஒரு நபர், கடந்த வாரம் வட கொரியா திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவசர கூட்டத்தை நடத்திய வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், எல்லை நகரத்தை பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.

மேலும் வைரசைக் கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை உடனே செய்யுமாறு வட கொரிய தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வட கொரியா வெற்றி பெற்றுள்ளது என வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரானிலுள்ள இலங்கையர்களை வெளியேற்ற உதவும் இந்தியா!

Shafnee Ahamed

காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது – உக்ரைன் ஜனாதிபதி.

ஜப்பானின் பிரபல நகைச்சுவை நடிகர் கென் ஷிமுரா கொரோனாவால் பலியானார்