வணிகம்

ETI, சுவர்ணமஹால் நிறுவன வைப்பாளர்களுக்கு நட்டஈடு

(UTV|கொழும்பு)- ETI மற்றும் சுவர்ணமஹால் பைனான்சியல் சர்விசஸ் நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை நாளை(25) மற்றும் நாளை மறுதினம்(26) இடம்பெறுமென மக்கள் வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை மூலம் ETI பைனான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பைனான்சியல் சர்விசஸ் ஆகிய வியாபார நிறுவனங்கள் கடந்த 13 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.

அவற்றில் வைப்பிட்டவர்கள் இழப்பீடுகளைப் பெற விண்ணப்பிக்கும் போது, சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை என்பனவற்றின் பிரதிகளை மக்கள் வங்கியிடம் முறையாகக் கையளிப்பதன் மூலம் இழப்பீட்டை முறையாகப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

GES 2017 பிரதிநிதிகளுடன் அறிவு பகிர்வு அமர்வொன்றை ICTA மற்றும் அமெரிக்க தூதரகம் இணைந்து ஏற்பாடு

இலங்கை – பங்களாதேஷுக்கு இடையே 12 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்து