உள்நாடுவணிகம்

ETI மற்றும் சுவர்ணமஹால் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு கொடுப்பனவு

(UTV|கொழும்பு) – ETI நிதி நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் நிதி நிறுவனம் (SWARNAMAHAL FINANCIAL SERVICES) போன்றவற்றின் முதலீட்டாளர்களுக்கு நட்டஈடு வழங்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியானது ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பனவற்றின் நிதி வியாபாரங்கள் கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இடைநிறுத்தியிருந்தது.

அதனடிப்படையில் குறித்த இரு நிதி நிறுவனங்களின் முதலீட்டாளர்களுக்கு 06 இலட்சம் ரூபா வரை நட்டஈடு வழங்க உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 25 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபடும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றத் தேர்தலுக்கு இதுவரை கட்டுப்பணம் செலுத்தியோரின் விபரம் வெளியானது

editor

இலங்கை இராணுவத்தின் 24வது தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே

இலங்கையின் முதலாவது காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் திறந்து வைப்பு