உள்நாடு

ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து, ராஜாங்கனை பிரதேசத்தில் 12,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டாவது தடவையாக பீசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் நாளைய தினம் (18) ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கந்தக்காடு சேனபுர புனர்வாழ்வு நிலையத்தில் இதுவரை 5000 பீசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானங்கள் போக்குவரத்தில் மற்றம்

“அமைச்சர்களுக்கு வந்தது புதிய தடை”

தமிழர்களுக்காக UNயின் தலையீடு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் – சம்மந்தன், சுமந்திரன் வலியுறுத்தல்