உள்நாடு

அங்குலான துப்பாக்கிச்சூடு : விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் [UPDATE]

(UTV | கொழும்பு) -அங்குலானவில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள், குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலியா சேனாரத்ன தெரிவித்திருந்தார்.

+++++++++++++++++++++++++++++++++++++++  UPDATE 

அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பதற்ற நிலை

அங்குலானை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சாட்சியாளர்கள் இருவர் இன்று காலை 5 மணியளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச்செல்லப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் இன்று பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை

முன்னாள் ஜனாதிபதி ரணில் சூம் தொழிநுட்பம் ஊடாக வழக்கில் இணைந்தார்

editor

முஸ்லிம் அமைச்சர்கள் இல்லையென அதைப் பிடித்துக் கொண்டு தொங்காதீர்கள் – அமைச்சர் விஜித ஹேரத்

editor