உள்நாடு

இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை நாளை(14) முதல் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக வெளிநாட்டு தொடர்புகள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் காணப்படும் இடப்பற்றாக்குறையை கவனத்தில் கொண்டே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அதிகளவான கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பதினைந்து பேரடங்கிய சர்வகட்சி அரசுக்கு ஜனாதிபதி இணக்கம்

கிழக்கு மாகாண தமிழ்மொழி பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

இலங்கையில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டினருக்கும் விசா நீடிப்பு