உள்நாடுசூடான செய்திகள் 1

விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிக்கும் சூழல் உருவாகியுள்ளது

(UTV | கொழும்பு ) – உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தைகளுக்கு அதிக விலைகளுக்கு விவசாயிகளுக்கு தானியங்களை விநியோகிப்பதற்கான சூழல் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று(03) விவசாயிகளை சந்தித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் தானியங்கள் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளமையினாலேயே இந்த நிலைமை உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சோளம்,பயறு,கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள களஞ்சிய வசதிகள் தொடர்பிலும் இதன் போது ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

Related posts

ரயில் பொதிசேவை இன்று முதல் மீளவும்

வியட்நாம் தூதுவருக்கும் ஜனாதிபதி அநுரவுக்கும் இடையில் சந்திப்பு.

editor

குண்டுதாக்குதல் வழக்கிலுள்ள நெளபர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக 7,721 குற்றச்சாட்டுகள்!