உள்நாடு

ஓமானிலிருந்து நாடு திரும்பிய 288 இலங்கையர்கள்

(UTV|கொழும்பு)- ஓமானில் சிக்கியிருந்த 288 இலங்கையர்கள் இன்று(29) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவையின் விசேட விமானம் மூலம் இன்று(29) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்விமானப் பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததை தொடர்ந்து, பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹொங்கொங் நாட்டில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் நேற்றிரவு(28) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Related posts

எரிபொருள் கிடைக்காவிடின் மாலை 4 மணிக்கு பின்னர் மின் துண்டிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை!

சர்வஜன வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் – டில்வின் சில்வா

editor