உள்நாடு

நாளை 12 மணித்தியால நீர் விநியோகம் தடை

(UTV|கொழும்பு) – நாட்டில் பல பகுதிகளில் நாளை(18)12 மணித்தியால நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன்படி, வெலிசறை, மாபோல, மஹபாகே, கந்தான, நாகொட, திக்கோவிட்ட, பமுனுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளில் நாளை(18) காலை 9 மணி முதல் 12 மணித்தியாலம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

அனைத்து தொழிற்சங்கங்களும் ஒருமித்த செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் – ஜீவன் தொண்டமான்.

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவிப்பு!

editor

கைது செய்யப்பட்டோர் மார்ச் 16 ம் திகதி வரை விளக்கமறியல்