உலகம்

தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்த வடகொரியா முடிவு

(UTV|வட கொரியா)- வட கொரியா மற்றும் தென் கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வட கொரிய எல்லை நகரான கேசிங்கிற்கு தென் கொரியாவில் இருந்து செய்யப்படும் வழக்கமான தினசரி அழைப்புகளை இன்று முதல் வட கொரிய அரசு நிறுத்தியுள்ளது.

வட கொரியா மற்றும் தென் கொரிய அதிகாரிகள் இடையிலான அனைத்து தொலைத் தொடர்புகளையும் ஜூன் 9-ம் திகதி 12 மணி முதல் நிறுத்தப்பட்டதாக என கேசிஎன்ஏ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இராணுவம் தொடர்பான தொடர்புகளும் நிறுத்தப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

2018-ல் நடந்த தென் கொரிய அதிபர் மற்றும் வட கொரிய தலைவர் இடையே நடந்த உச்சி மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட அமைதி ஒப்பந்தங்களை மீறி, சிலர் பிரசுரங்களை விநியோகித்து பிரசாரங்களில் ஈடுபடுவது ஒரு விரோதமான செயல் என கிம் யோ-ஜோங் தெரிவித்திருந்தார்

Related posts

முஸ்லிம்களின் நலனுக்கான செயல்பாடுகளில் எனது நிர்வாகம் எப்போதும் கைகோத்து நிற்கும் – இப்தார் விருந்தில் டொனால்ட் டிரம்ப்

editor

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

இம்ரான் கானின் சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு!