உள்நாடு

ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாடுகளில் கடமையாற்றிய 236 சிவில் கடற்படையினரே இன்று இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டுக்கு அழைத்து வந்த பின்னர் அவர்களை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அனுரவிற்கு பகிரங்க சவால் விடுத்த திலித் ஜயவீர!

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி