உலகம்

நோபாளத்தில் முதலாவது மரணம் பதிவாகியது

(UTV | கொவிட் 19) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நோபாளத்தில் முதலாவது மரணம் நேற்றையதினம் பதிவாகியுள்ளது.

29 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தாக நேபாளத்தின் சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த பெண் கடந்த 6 ஆம் திகதி, குழந்தை ஒன்றை பிரசவித்து காத்மண்டு வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான குறித்த பெண், மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நேபாளத்தில் இதுவரை 281 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தியோகப்பூர்வ கார் தீப்பற்றியது

editor

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்

கொஞ்சம் ஸ்லோ ஆக இருக்கும் தடுப்பூசிகள் வேலை செய்யாது