உள்நாடு

உயர்தரப்பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – 2020ம் ஆண்டு க. பொ.த உயர்த்தரத்திற்கு செல்லும் மாணவர்கள் நாளை முதல் ஒன்லைன் (online) முறை மூலம் விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உயர்த்தர வகுப்புக்கு செல்ல தயாராகும் மாணவர்கள் கல்வி அமைச்சின் www.info.moe.gov.lk  என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் விண்ணப்பதாரர் ஒருவருக்கு 10 பாடசாலைகள் வரை விண்ணப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் ஜுன் மாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறு கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

பட்டலந்த இராணுவ முகாமிலும் கொரோனா

தப்பிச் செல்ல முயன்ற வலஸ் கட்டா – வைத்தியசாலையில் அனுமதி – பலத்த பாதுகாப்பு

editor

எகிறும் கொரோனா : ஒட்சிசன் தொகையை இறக்குமதி செய்ய நடவடிக்கை