உள்நாடுசூடான செய்திகள் 1

போக்குவரத்து தண்டப்பணம் செலுத்த சலுகைக் காலம் வழங்க தீர்மானம்

(UTV|கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக போக்குவரத்து விதிமீறல்  தண்டப்பணம் செலுத்துவதற்கான விசேட சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடன் இந்த சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே 11 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை குறித்த இந்த சலுகைக் காலம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைவாக மார்ச் 01 திகதி அல்லது அதன் பின்னர் வழங்கப்பட்ட போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை மேலதிக தண்டப்பணமின்றி செலுத்துவதற்கு நிவாரணக் காலம் உரித்தாகும் என தெரிவிக்கப்படுகிறது

Related posts

அம்பாறை பதியதலாவயில் காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை!

editor

 வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாசகார செயற்பாடுகள் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெறும் வேலைத்திட்டங்கள் எம்மிடம் இல்லை – சஜித்

editor