உள்நாடு

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை

(UTV கொழும்பு)- அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்த விற்பனையாளர்கள் தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள 800-இற்கும் அதிகமான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தொடர்பில் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் சாந்த திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை ஆணைக்குழு அங்கீகரிக்குமா? இன்று கூடி-முடிவு