உள்நாடு

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 47ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12 ஆயிரத்து 448 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 209 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

“பொடி லெசி” தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் அறிவிப்பு

க.பொ.த (சா/த) பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் இன்றுடன் நிறைவு

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த வத்திக்கான் தூதுவர்!

editor