உலகம்

சவூதியில் சிறுவர்களுக்கான மரண தண்டனை இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | சவூதி அரேபியா) – சவூதி அரேபியாவில், மனித உரிமைகளை நிலைநாட்டும் வகையில், சவூதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, பல்வேறு குற்றங்களுக்கு, வழங்கப்பட்டு வந்த கசையடி தண்டனையை, கடந்த சனிக்கிழமை இரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சிறார்களுக்கு வழங்கப்பட்டு வந்த மரண தண்டனையை இரத்து செய்து அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

சவூதியின் இந்த அறிவிப்புக்கு மனித உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Related posts

கன்னி பயணத்தை ஆரம்பிக்கும் உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்!

நெஞ்சு வலி காரணமாக மன்மோகன் சிங் வைத்தியசாலையில்

குடியுரிமை திருத்தச் சட்டம் – 38 பேர் பலி