உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலை மே 28 ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு ஹுல் நிராகரிப்பு

(UTVNEWS | COLOMBO) –பொதுத்தேர்தலை மே மாதம் (28) ஆம் திகதி நடத்தும் யோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் நிராகரித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாகவே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மே மாதம் 28 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானியை வௌியிடுவதற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதன்போது யோசனை முன்வைத்ததாக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யோசனையை நிராகரிக்கும் வகையில் இந்த கடிதத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 28 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தாம் இணங்காதிருப்பதற்கான நிலைப்பாட்டினை நியாயப்படுத்துவதற்காக பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் ஏழு விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

ஓய்வுபெற்ற நீதிபதி பத்மினி CIDயில்

மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் மீண்டும் திறப்பு