உள்நாடு

சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை

(UTV|கொழும்பு)- வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எந்த வகையிலும் சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சில கட்டுப்பாடுகளுடன் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் என அறிக்கை ஒன்றினூடாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் வழமையாக முன்னெடுக்கப்படும் சத்திர சிகிச்சைகள் மற்றும் புற்றுநோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிற்போடக்கூடிய சத்திர சிகிச்சைகள் தொடர்பில் தேவையான வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

அத்துருகிரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு.

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

வாக்களிக்க விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாதகாலம் சிறை – பெப்ரல் அமைப்பு எச்சரிக்கை

editor