உள்நாடுவணிகம்

இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து IMF மீளாய்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், அவசர கடன் உதவி தொடர்பில் இலங்கையால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை குறித்து மீளாய்வு செய்யப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தகவல் வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன் உதவிக்கு பதிலாக இந்த அவசர கடன் உதவியை வழங்குவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுவதாகவும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்கப்படும் நாடுகளின் அண்மைய பட்டியலில் இலங்கை உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரினாலும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளினை அடுத்தே சர்வதேச நாணய நிதியம் குறித்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும் எழுச்சி பெறுவோம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

editor

பிரதமர் ஹரிணி தலைமையில் சீன புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால, முன்னாள் பிரதமர் தினேஷ் கலந்துகொண்டனர்

editor

10000 ரூபாய் பணம் வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்

editor