உள்நாடுசூடான செய்திகள் 1

அமெரிக்கா ஜனாதிபதியிடம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

(UTV|கொவிட் – 19) – உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை தொடர்ந்தும் வழங்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியை உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்த தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராகம மருத்துவ பீட சம்பவம் : அருந்திகவின் மகன் கைது

இலஞ்ச,ஊழல் ஆணைக் குழு அதிகாரிகளுக்குப் பயிற்சி

அரசியலமைப்பு சபை மீண்டும் இன்று கூடவுள்ளது.