உலகம்

கொவிட் 19க்கு மத்தியில் தென்கொரியாவில் தேர்தல்

(UTV|கொழும்பு)- உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்து வரும் சூழலில், தென் கொரியாவில் பலத்த பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளோடு பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வாக்களிக்க காத்திருக்கும் வாக்காளர்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி வேண்டும், வாக்காளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வாக்களிக்க வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே, அவர்கள் வாக்குசாவடிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

தென் கொரியாவில் பாராளுமன்றத் தேர்தல் ஒருபோதும் தள்ளிவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

டொங்கா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

editor

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிர்வாணப்படங்கள் – அதிர்ச்சியில் ஸ்பெயின் நகரம்.

ஆழ் கிணற்றில் வீழ்ந்த ‘ரயான்’ : மீட்புப் பணிகள் தொடர்கிறது