உள்நாடு

கர்ப்பிணித் தாய்மார்களுக்காக தொலைபேசி சேவை அறிமுகம்

(UTV|கொழும்பு)- இலங்கை பிரசவ மற்றும் பெண் நோயியல் மருத்துவர்கள் சங்கம், கர்ப்பிணித் தாய்மார்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பில் தற்போதுள்ள நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 071 030 1225 எனும் தொலைபேசி ஊடாக தங்களுக்கான பிரச்சினைகளுக்கு, விசேட வைத்திய நிபுணர்கள் மூலம் பதில் வழங்கப்படும் என அச்சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் U.D.P. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் பேரூந்து சேவைகள் மட்டு

இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தனது பூரண ஆதரவை வழங்கும்

எரிவாயு நிறுவனங்கள் சமையல் எரிவாயு குறித்து இன்று தீர்மானிக்கும்