உள்நாடு

நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை

(UTVNEWS | COLOMBO) –நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை ஒன்றை மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

முதியோர்கள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் சமூர்த்தி குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பணிகள் தெ்ாடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி வரை 62,977 பேருக்கு ரூபா 5000 நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் சிறுநீரக நோயாளிகளுக்கான ரூபா 5000 கொடுப்பனவுகள் இதுவரையில் 38,083 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சமூர்த்தி பயனாளிகளுக்கான ரூபா 5000 கொடுப்பனவு 78,962 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி செய்கின்ற அனைத்தும் இன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது – சஜித்

editor

2021 பரீட்சைகளுக்கான புதிய நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை அனுமதி

முச்சக்கர வண்டிகளது சேவைகள் வழமைக்கு