உள்நாடுசூடான செய்திகள் 1வணிகம்

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – நாட்டில் அரிசி வகைகளுக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயித்து பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டரிசி குத்தரிசி ஒரு கிலோவின் அதிகூடிய சில்லறை விலையாக 90 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பா ஒரு கிலோ சிவப்பு, வெள்ளை ஒரு கிலோ 90 ரூபாயும், கீரி சம்பா ஒரு கிலோ 125 ரூபாயும், வெள்ளை, சிவப்பு நாடு ஒரு கிலோ 85 ரூபாயும் அதிகூடிய சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை நிர்ணயம் இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வருவகின்றது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகார சபை விற்பனையாளர்களை எச்சரித்துள்ளது.

Related posts

கடவுச்சீட்டு குறித்து பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்ட தகவல்

editor

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் அவசர அறிவிப்பு

editor

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றிய பொலிஸார்

editor