உள்நாடு

சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகம்; வாழைச்சேனையில் சம்பவம்

(UTVNEWS | COLOMBO) -சிறிய தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட 15 வயது சிறுமியை மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவர்கள் குறித்த சிறுமியின் வீட்டை முற்றுகையிட்டு 8 மாத கர்ப்பமான நிலையில் ஒழிந்திருந்த சிறுமியை மீட்டனர்.

கொழும்பில் இருக்கும் குறித்த சிறுமியின் சிறிய தந்தையின் வீட்டிற்கு தாயாருடன் கடந்த 8 மாதத்திற்கு முன் சிறுமி சென்ற நிலையில் அங்கு சிறிய தந்தையார் மேற்கொண்ட பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக கர்ப்பணியாகியதால் வீட்டில் ஒழிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related posts

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

editor

IMF குழு மார்ச் 7ஆம் திகதி இலங்கைக்கு!

கொரோனா தொற்றிலிருந்து 86 பேர் குணமடைந்தனர்