உள்நாடு

சுற்றுலாப் பயணங்களுக்கு மீள் அறிவித்தல் வரை தடை

(UTV|கொழும்பு) -உள்நாட்டினுள் யாத்திரை மற்றும் சுற்றுலாப் பயணங்கள் இன்று முதல் மீள் அறிவித்தல் வரை முழுவதுமாக தடை செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

மக்களின் பாதுகாப்பிற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த ஆலோசனைகளை மீறி செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொவிட் அச்சுறுத்தலுக்கு பின்னர் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப்பயணிகள்

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்!

அதிக போதைப்பொருள் பாவனை – உயிரிழந்த இளைஞன்