உள்நாடு

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்

(UTV|கொழும்பு) – இன்று(05) நண்பகல் 12 மணிக்கு பின்னர் தாம் சேவையில் இருந்து விலகி இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

ரயில்வே சாரதிகளுக்கு போதியளவு பாதுகாப்பு இல்லை என்றும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் கோரி ரயில்வே சாரதிகள் சேவையில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிகப்படுகின்றது.

போதைப்பொருள் போக்குவரத்தின் பிரதான மார்க்கமாக ரயில்வே சேவை இருப்பதாகவும், அதற்கு ரயில்வே ஊழியர்களும் தொடர்பு என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.

குறித்த கருத்தில் ரயில்வே சாரதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் உள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் இன்று(05) நண்பகல் 12 மணிக்கு தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பேரிச்சம் பழத்திற்கான வரி குறைப்பு!

கொழும்பு மக்களுக்கான நிவாரண தொகை வழங்கும் திட்டம் ஆரம்பம்

கல்முனை விவகாரம் ஹரீஸ் MPயின் தனிப்பட்ட பிரச்சினை இல்லை : முஸ்லிம் தலைவர்கள் கல்முனைக்காக குரல் எழுப்புங்கள் – ரஹ்மத் மன்சூர்