உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்

(UTV|கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றத்திற்கு இன்றுடன் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன.

இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் பெரும்பாலும் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைவாக 19 ஆவது அரசியல்யாப்புக்கு அமைவாக ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்திற்கு அமைய பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார்..

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படவுள்ளது.

Related posts

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு

ஸ்ரீ.சு.கட்சி – ஸ்ரீ.பொ.முன்னணி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

அலி சப்ரி – தென்னாபிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு