உள்நாடு

குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

(UTV|திருகோணமலை ) – திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதவாச்சி குளத்தில் மூழ்கி நான்கு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று(19) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பதுளை – ஹாலியெல பகுதியிலுள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விகற்கும் மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு கோமரங்கடவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

‘கெசல்வத்த ஃபவாஸ்’ கொலை

ஹபரனை விவகாரம் : விசாரணை குழு நியமனம்

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை உயர்வு