உள்நாடுசூடான செய்திகள் 1

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் இன்று விவாதம்

(UTV|கொழும்பு)- மத்திய வங்கியின் முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் கணக்காய்வு அறிக்கை குறித்து இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று(18) மதியம் ஒரு மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளது.

தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பில் ஆங்கில மொழியிலான இருவெட்டுக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழ் மற்றும் சிங்கள மொழியிலான மொழிபெயர்ப்புகள் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற செயலாளர் நாயகம் கூறியுள்ளார்.

இது தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில சமர்ப்பிக்கவுள்ளது.

Related posts

சிந்தித்து தீர்மானியுங்கள் – தவறினால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் இருக்காது – ஜனாதிபதி ரணில்

editor

கத்தி முனையில் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – நாளை நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு

editor

கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் வசிப்பவர்கள் சிலரால் தாக்கப்பட்டதில் பொலிஸ் சார்ஜன்ட் பலி