உள்நாடுசூடான செய்திகள் 1

விடுமுறை நாட்களில் விசேட ரயில் சேவை

(UTVNEWS | COLOMBO) – வாராந்த விடுமுறை நாட்களை முன்னிட்டு எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.

கொழும்பு கோட்டை- பதுளை  ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் இந்த விசேட ரயில் சேவை நடைபெறவிருப்பதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைவாக இலக்கம் 01 ரயில் இந்த காலப்பகுதியில் இரவு 7.35மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.50மணிக்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையும்.

அதேபோன்று இலக்கம் 02 ரயில் இரவு 8.30 மணிக்கு பதுளை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 5.27 மணியளவில் கொழும்பு கோட்டை நிலையத்தை வந்தடையும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

மக்கள் விடுதலை முன்னணிக்கு 3 சதவீத வாக்குகளைப் பெற 57 வருடங்கள் சென்றது – எங்களுக்கு வெறுமனே 7 மாதங்களில் 4 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன – திலித் ஜயவீர எம்.பி

editor

இன்று நள்ளிரவு முதல் ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

editor

70 முஸ்லிம் மாணவிகளின் A/L பெறுபேறுகள் நிறுத்தம்! திட்டமிட்டு செய்துள்ளார்கள் -அப்துல்லா மஹ்ரூப் (வீடியோ)