உள்நாடுசூடான செய்திகள் 1

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

(UTVNEWS | KALUTARA) – களுகங்கையில் உப்பு கலந்துள்ளதால் அந்த நீரை பருக வேண்டாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை பொதுமக்களை எச்சரித்துள்ளது.

சீரற்ற காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பௌசர்களில் வழங்கப்படும் நீரை மாத்திரம் பருகுமாறு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வாத்துவ, களுத்துறை, பேருவளை, பயாகல, அளுத்கம, பொம்புவல, பிலிமினாவத்த மற்றும் பெந்தர ஆகிய இடங்களில் இந்த நிலைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

பேருந்து கட்டணம் தொடர்பாக எடுக்கப்பட்ட தீர்மானம்!

கடந்த 24 மணித்தியாலங்களில் 363 பேர் கைது

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்..