உள்நாடு

அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

(UTVNEWS | COLOMBO) – புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்களை உள்ளடக்கிய முன்மொழிவுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ´பலமானதொரு அரசு – எமது அரசியலமைப்பொன்றுக்கான முன்மொழிவுகள்´ என்ற கருப்பொருளின் கீழ் ´யுத்துகம´ அமைப்பு தயாரித்த முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அவ் அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க ஜனாதிபதியிடம் அம்முன்மொழிவுகளை கையளித்தார்.

Related posts

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறைவு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தகவல் .

எகிறும் கோழி இறைச்சி விலை

நாட்டை வந்தடைந்துள்ள விளையாட்டு வீரர்களின் வாகன பேரணி கொழும்புக்கு