உள்நாடு

பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு அழைப்பு

(UTV|கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு முன்னர் தும்மலசூரிய காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் தும்மலசூரிய தலைமையில்   விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டது

அத்துடன்  ஏப்ரல் 21 தாக்குலை நடாத்திய சஹ்ரான் ஹாஷிமுடன் தொடர்பு வைத்திருந்த ஒருவர் தும்மலசூரிய தலைமையில்  கைது  செய்யப்பட்டிருந்தார்.

இதன் பின்னணியிலேயே ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முன்னிலையாகுமாறு தும்மலசூரிய காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் பிரதான காவல்துறை பரிசோதகர் அத்துல குமார கமமே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

Related posts

நாடளாவிய ரீதியில் சுற்றுலா கிராமங்களை உருவாக்க அரசு தீர்மானம்

சவால்களை எதிர்கொள்ளக் கூடிய புதிய திட்டங்களோடு பயணிப்பதற்கு மட்டு மாவட்ட முஸ்லிம் ஊடகவியலாளர் சம்மேளனம் தீர்மானம்

editor

இரு குற்றச்சாட்டுக்களில் இருந்து முன்னாள் அமைச்சர் ரிசாட் விடுதலை