உள்நாடு

அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு

(UTV| கொழும்பு) – வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 249 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த மாவட்டத்தில் மாத்திரம், 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 573 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 307 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இஷாரா செவ்வந்தி குறித்து போலி தகவல் வழங்கிய நபருக்கு விளக்கமறியல்

editor

தற்போதைய ஜனாதிபதி தனது தேர்தல் வாக்குறுதிகளை கூட மீறியுள்ளார் – சஜித்

editor

இதுவரை 1,05,105 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுப்பு