உள்நாடு

வாகன விபத்தில் ஐவர் படுகாயம்

(UTV|மாத்தறை) – மாத்தறை-கதிர்காமம் பிரதான வீதியின் ஹம்பலாந்தோட்டை கிரலகெலே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வெளிநாட்டவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

கதிர்காமத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன். ஹம்பலாந்தோட்டை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related posts

‘தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யத் தயார்’ – நாமல்

திருக்கோணேஸ்வரர் ஆலய வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபா!

editor