உலகம்

பாலம் இடிந்து விழுந்ததில் 09 பேர் பலி

(UTV|இந்தோனேசியா) – இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் கவுர் நகரில் ஆற்றின் நடுவே புதிதாக பாலம் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த பாலத்தின் மீது மாணவர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ள நிலையில், இடிந்து விழுந்த பாலத்தோடு சேர்ந்து, அதில் நின்றவர்களும் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.

ஏற்கனவே பெய்து வரும் மழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்தது. இதனால் அதில் விழுந்தவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் பலர் மீட்கப்பட்ட நிலையில், 9 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தோனேசிய தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் மழை பெய்து வருகின்றமையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இந்த மாதத்தில் மட்டும் அங்கு 67 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இஸ்ரேலை சேர்ந்த 20 பணயக் கைதிகளை நாளை விடுவிக்கிறது ஹமாஸ்

editor

WHO உடன் கூட்டு சேர்ந்தே சீனா வைரஸினை பரப்பியது

மர்ம நபர் துப்பாக்கி சூடு – 05 பேர் பலி