உள்நாடு

மேல் நீதிமன்ற நீதிபதி கிஹானிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

(UTV|கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடிய குரல் பதிவுகள் தொடர்பில் தற்போதைய எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

நீதிபதியிடம் நேற்று(19) 5 மணித்தியாலம் வரை வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் உத்தரவிற்கமையவே நீதிபதி கிஹான் பிலபிட்டியவிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுடன் சர்ச்சைக்குரிய வகையில் நீதிமன்ற செயற்பாடுகள் குறித்து உரையாற்றியமை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

Related posts

குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை நன்கு அறிந்த இப்ராஹமின் குடும்பம் – சரத் வீரசேகர

கைதிகளைப் பார்வையிடுவதற்கு இன்று முதல் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி

2025 ஆம் ஆண்டில் இத்தனை விடுமுறைகளா?

editor