உள்நாடு

ராஜிதவுக்கு எதிரான மனு விசாரணை செவ்வாயன்று

(UTV|கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவானால் வழங்கப்பட்ட பிணை உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீள் பரிசீலனை மனுவினை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பில் எதிர்வரும் 21ம் திகதி அறியப்படுத்துவதாக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

​வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கடந்த மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ராஜிதவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சட்டமா அதிபரால் குறித்த மீள் பரிசீலனை மனு தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதற்காக ஹர்ஷான் டி சில்வாவுக்கு விளக்கமறியல்

editor

இலங்கை மத்திய வங்கிக்கு இரண்டு புதிய பிரதி ஆளுநர்கள் நியமனம்

editor

வாழைச்சேனை, கருவாக்கேணியில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்பு

editor