உள்நாடு

சாதாரண பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் 2ஆம் கட்டம்

(UTV|கொழும்பு)- கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த பணிகளுக்காக 3 பாடசாலைகள் முழு அளவில் மூடப்படவுள்ளதுடன் 24 பாடசாலைகள் பகுதி அளவில் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மஹாமாய மகளிர் வித்தியாலயம், கண்டி புனித அந்தோனி மகளிர் வித்தியாலம், குருணாகல் மல்வபிட்டிய ஊறுறு கன்னங்கர வித்தியாலயம் என்பன முழு அளவில் மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

09ஆம் திகதி புதிய அமைச்சரவை : எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சு

“சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை”

பல்கலைக்கழக மாணவர்கள் கைது!