உள்நாடு

முஸாதிக்காவின் வீட்டிற்கு சென்று பாராட்டிய பௌத்த மதகுரு

(UTV|திருகோணமலை) – கடந்த 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப்பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவி ஒருவரின் வீட்டிற்கு சென்று பௌத்த மதகுரு பாராட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்வி பொதுத்தராதர உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் திருகோணமலை மாவட்டத்தில் முதலாம் இடம்பெற்று வைத்திய துறைக்கு தெரிவான மூதூரை சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிக்காவின் வீட்டிற்கு மொறவெவ பிரதேச சபையின் தவிசாளரும் திருகோணமலை தெவனிபியவர இந்ரா ராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியுமான பொல்ஹேன்கொட உபரத்ன தேரர் நேற்று விஜயம் செய்தார்.

மேலும் அந்த மாணவியின் படிப்புக்கு தான் உதவி செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இம்முறை உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதம் நடைபெறும்

புதிய அரசாங்கத்தின் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற வேலைத்திட்டத்துக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

editor

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

editor