உள்நாடு

நிக்கவெரட்டிய சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விஷேட குழு

(UTV|குருநகல்) – நிக்கவெரட்டிய, கொட்டவெஹர பகுதியில் மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுப்பதற்காக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் மூவர் அடங்கிய குழு ஒன்று அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டவெஹெர பிரதேசத்தில் 13 வயதான சிறுமி ஒருவரை அந்த சிறுமியின் இரண்டாவது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய கிராம சேவகர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கர்ப்பத்தை கலைப்பதற்காக வைத்திய ஆலோசனையின்றி மருந்து உட்கொண்ட பெண் உயிரிழப்பு

editor

பேரூந்து உரிமையாளர்களுக்கான மானியம்

உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி

editor