உள்நாடுவணிகம்

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணத்தில் மாற்றம் இல்லை

(UTV|COLOMBO) – எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை குறைப்பதற்கு தாம் தயாராக இல்லையென அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி எரிபொருள் மானியம் பெற்று அதன் பயனை பயணிகளுக்கு வழங்கவே தாம் எதிர்பார்த்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து முச்சக்கரவண்டிகளுக்கான பயணக் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சுய தொழில் தேசிய முச்சகரவண்டிகள் சங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்திய பிரதமர் மோடிக்கு மித்ர விபூஷண விருது வழங்கி கௌரவிப்பு

editor

இன்று ‘சைனோபாம்’ முதலாம் தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

இலங்கைக்கு வந்த எரிபொருள் கப்பல் திரும்பிச் சென்றது – உள் விவகாரங்களில் ஏற்பட்ட பிரச்சினை

editor